ஜீவனுள்ள காலமெல்லாம் - Jeevanulla Kaalamellaam - Tamil Christian Song Lyrics
ஜீவனுள்ள காலமெல்லாம்
இயேசுவையே பாடுவேன்
எனக்காக ஜீவன் தந்த
நேசரையே நாடுவேன்
அர்ப்பணித்தேன் என்னையுமே
அகமகிழ்ந்தேன் அவரிலே
அவரே என் வாழ்வில் அற்புதம்
அவரில் என் வாழ்வு உன்னதம்
மாராவின் கசப்பும் கூட மதுரமாக மாறிடும்
மாறாத மனமும் கூட மன்னவரால் மாறிடும்
தேசம் தேவனை அறிந்திடுமே
அழியும் பாதை மாறிடுமே
தேவனின் ராஜ்யம் ஆகிடுமே
தாகமுள்ள ஜெபத்தினால்- நம்
முடங்காத முழங்கால் யாவும்
கர்த்தர் முன்பு முடங்கிடும்
துதியாத நாவு யாவும் தூயவரை துதித்திடும்
உள்ளத்தின் கண்கள் திறந்திடுமே
பாரெங்கும் மலர்ச்சி தோன்றிடுமே
பரிசுத்த ராஜ்யம் ஆகிடுமே
பாரமுள்ள ஜெபத்தினால் - நம்
ஜீவனுள்ள காலமெல்லாம் - Jeevanulla Kaalamellaam - Tamil Christian Song Lyrics
Reviewed by
on
April 25, 2018
Rating:
No comments:
Type your Valuable Suggestions