Antho Kalvariyil - அந்தோ கல்வாரியில்



அந்தோ! கல்வாரியில்
அருமை இரட்சகரே
சிறுமை அடைந்தே
தொங்குகிறார்

1. மகிமை மாட்சிமை
மறந்திழந்தோராய்
கொடுமைக்குருசைத்
தெரிந்தெடுத்தாரே
மாய லோகத்தோடழியாது யான்
தூய கல்வாரியின்
அன்பை அண்டிடவே - அந்தோ

2. அழகுமில்லை சௌந்தரியமில்லை
அந்தக் கேடுற்றார் எந்தனை மீட்க
பல நிந்தைகள் சுமந்தாலுமே
பதினாயிரம் பேரிலும் சிறந்தவரே - அந்தோ

3. அதிசயம் இது இயேசுவின் தியாகம்
அதிலும் இன்பம் அன்பரின் ஸ்நேகம்
அதை எண்ணியே நிதம் வாழுவேன்
அவர் பாதையை
நான் தொடர்ந்தேகிடவே - அந்தோ

4. சிலுவைக் காட்சியை கண்டு முன்னேறி
சேவையே புரிவேன் ஜீவனும் வைத்தே
என்னைச் சேர்த்திட வருவேனென்றார்
என்றும் உண்மையுடன்
நம்பி வாழ்ந்திடுவேன் - அந்தோ


Song Description: Tamil Christian Song Lyrics, Antho Kalvariyil, அந்தோ கல்வாரியில்.
KeyWords: Communion song Lyrics, Good Friday Song Lyrics, Antho Kalvaariyil Arumai.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.