Ennathaan Nernthalume - என்னதான் நேர்ந்தாலுமே




என்ன தான் நேர்ந்தாலுமே 
என் இயேசு என்னோடுதான் 
கஷ்ட பாடு பெருகிடினும் 
காக்கும் கரமது என்னோடு தான் 

உங்க அழைப்பின்
சேவையை பின்பற்றுவேன்  
நம்பி தந்த பொறுப்பை
நான் நிறைவேற்றுவேன் 
இயேசய்யா - 3

1. தேவைகள் பெருகி கலங்கும் போது
என் சார்பில் செயலாற்றுவீர்
தோல்வியால் என் உள்ளம்
சிதைந்திடும் போது 
உம் தோள்களில் இடம் தருவீர் - 2
உம்மை நம்பியுள்ளேன் 
உம்மை பற்றிக்கொள்வேன் - 2
ஏற்ற காலத்தில் உயர்த்திடுவீர் - 2

2. போராட்ட அலைகள்
என் மேல் அடிக்கையில்
எனக்காக யுத்தம் செய்வீர்
எதிரான நாவுகள்
உள்ளத்தை உடைக்கையில் 
எனக்காக வழக்காடுவீர் - 2
என்னை அழைத்தவரே 
எந்தன் ஆதாரமே - 2
மீண்டும் எனக்காக வருபவரே - 2


Song Description: Tamil Christian Song Lyrics, Ennathaan Nernthalume, என்னதான் நேர்ந்தாலுமே.
KeyWords:  Christian Song Lyrics, Ranjith Jeba, Davidsam Joyron, Ennathan Nernthalumae.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.