Naan Kanneer Sinthum - நான் கண்ணீர் சிந்தும்



நான் கண்ணீர் சிந்தும் போது
என் கண்ணே என்றவரே
நான் பயந்து நடுங்கும் போது
பயம் வேண்டாம் என்றவரே
நான் உன்னோடு இருக்கின்றேன் என்றவரே
நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே
நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே - 2

காரணமின்றி என்னை பகைத்தனரே
வேண்டுமென்றே சிலர் வெறுத்தனரே - 2
உடைந்த வேளை என்னை அரவணைத்தீர்
நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே
நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே - 2
                                                    - நான் கண்ணீர்

ஆகாதவன் என்று தள்ளிடாமல்
ஆண்டவரே என்னை நினைவு கூர்ந்தீர் - 2
ஆலோசனை தந்து நடத்தினீரே
நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே
நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே - 2
                                                    - நான் கண்ணீர்


Song Description: Tamil Christian Song Lyrics, Naan Kanneer Sinthum - நான் கண்ணீர் சிந்தும்.
Keywords: Johnsam Joyson, FGPC, Um Azhagana Kangal, Karunaiyin Piravagam, Nan Kanneer.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.