Nandri Solli - நன்றி சொல்லி




 

நன்றி சொல்லி பாடிட நாளெல்லாம் நேசிக்க 
உணர்வோடு வாழ்ந்திட கிருபை தாருமே 
கிருபையே கிருபையே தாருமே 
இன்னும் உம்மை நெருங்கிட 

1. தெள்ளுப்பூச்சி நானப்பா  தேறவும் வழியில்ல 
உடைந்த பாத்திரம் நான் ஒன்றுக்குமே உதவல
தேடி வந்தீரே கரங்களில் எடுத்தீரே
அழகாய் வனைந்தீரே ஆசீர்வதித்தீரே 
கண்களிலே கண்ணீர் இதயத்திலே ஏக்கம் 
உமக்காக வாழ துடிக்குதையா மனசு

2. செத்தவனைப் போல நான் 
எல்லாராலும் மறக்கப்பட்டேன்  
காய்ந்துபோன சருகை போல 
எல்லாராலும் ஒதுக்கப்பட்டேன் 
தேடி வந்தீரே வார்த்தையால் நிரப்பினீரே 
வாழ வைத்தீரே வழுவாமல் காத்தீரே
கண்களிலே கண்ணீர் இதயத்திலே ஏக்கம் 
உமக்காக வாழ துடிக்குதையா மனசு

3. உலகத்தின் குப்பையைப் போல 
எல்லாராலும் நினைக்கபட்டேன் 
பாவத்தில் கிடந்த என்னை 
தூக்கி எடுத்த தெய்வம் நீரே 
என் நேசர் நீரே வெள்ளைப்போளச் செண்டே
மருந்தோன்றிப் பூங்கொத்தே அழகின் பிறப்பிடமே 
கண்களிலே கண்ணீர் இதயத்திலே ஏக்கம் 
உமக்காக வாழ துடிக்குதையா மனசு

 

Tanglish

[keywords] Nandri Solli - நன்றி சொல்லி, Christinal Manova, Nantri Solli, Tamil Christian Song.