Ariyaathathum Ettaathathumana - அறியாததும் எட்டாததுமான



அறியாததும் எட்டாததுமான
பெரிய காரியம் செய்திட்டார்
எண்ண முடியாததும்
நான் நினையாததுமான
பெரிய காரியம் செய்திட்டார்

என் தேவனால்
எல்லா நன்மை கிடைத்திடுதே
என் தேவனால்
நல்ல மேன்மை கிடைத்திடுதே
என் தேவனால்
பரிபூரணமடைந்திட்டேனே

கிருபையால் நான்
என்றும் ஜெயித்திடுவேன் - 2

சிங்கத்தின் வாயை கிழிக்கின்ற
வரம் தந்தார்
சத்துரு கோட்டையை தகர்க்கின்ற
ஞானம் தந்தார் - 2

என் தேவனால்
நான் சேனைக்குள் பாய்வேன்
என் தேவனால் நான் வென்றிடுவேன் - 2
கிருபையால் நான் தாண்டிடுவேன்
கிருபையால் நான் வென்றிடுவேன்
அவர் கிருபையால் நான் தாண்டிடுவேன்
அவர் கிருபையால் நான் வென்றிடுவேன்
அல்லேலூயா அல்லேலூயா - 2

ராஜாவின் பிள்ளையாய்
என்னை அவர் மாற்றினார்
தேவனின் ராஜ்ஜியத்தை
எனக்குள்ளே அவர் வைத்திட்டார் - 2
நித்திய ஜீவனை இரத்தத்தால் தந்தாரே
நீதிமானாய் என்னை மாற்றினாரே - 2
அவர் கிருபையால் நான் மீட்பு பெற்றேன்
அவர் கிருபையால் நான் நீதி பெற்றேன் - 2
அல்லேலூயா அல்லேலூயா - 2

தேவையெல்லாம் அவர் நிறைவாக சந்தித்தார்
ஐஸ்வர்யம் எல்லாம் எனக்காக வைத்திட்டார் - 2
பாலைவனம் கூட சோலையாய் மாறீற்றே
பொன்னின் மேல் நடக்கின்ற வாழ்வை தந்தார்
அவர் கிருபையால் நான் வாழ்வு பெற்றேன்
அவர் கிருபையால் நான் மேன்மை பெற்றேன் - 2
அல்லேலூயா அல்லேலூயா - 2
                                                                             - அறியாததும்


Song Description: Tamil Christian Song Lyrics, Ariyaathathum Ettaathathumana, அறியாததும் எட்டாததுமான.
KeyWords: Vijay Aaron. Christian Song Lyrics, pls 4, Power Lines Vol - 4.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.