Pathukappar Nerukkadiyil - பாதுகாப்பார் நெருக்கடியில்



பாதுகாப்பார் நெருக்கடியில்
பதில் தருவார் ஆபத்திலே - 2
துணையாய் வருவார்
உதவி செய்வார் - 2

கைவிடார் கைவிடார் - 2
                   - பாதுகாப்பார்

நம் துதிபலி அனைத்தையுமே
பிரியமாய் ஏற்றுக்கொண்டார் - 2
நாம் செய்த நற்கிரியைகளை
மறவாமல் நினைக்கின்றார் - 2

கைவிடார் கைவிடார் - 2
                   - பாதுகாப்பார்

இதயம் விரும்புவதை
நமக்கு தந்திடுவார் - 2
(நம்) ஏக்கங்கள் அனைத்தையும்
செய்து முடித்திடுவார் - 2

கைவிடார் கைவிடார் - 2
                   - பாதுகாப்பார்

மகிழ்ச்சியில் ஆர்ப்பரிப்போம்
வரும் எழுப்புதல் நாம் காண்போம் - 2
நம் தேவன் நாமத்தினால்
கொடியேற்றி கொண்டாடுவோம் - 2

கைவிடார் கைவிடார் - 2
                   - பாதுகாப்பார்

பாதுகாத்தீர் நெருக்கடியில்
பதில் தந்தீர் ஆபத்திலே - 2
துணையாய் வந்தீர்
உதவி செய்தீர் - 2

நன்றி ஐயா நன்றி ஐயா - 2

துதிபலி அனைத்தையுமே
பிரியமாய் ஏற்றுக் கொண்டீர் - 2
நான் செய்த நற்கிரியைகளை
மறவாமல் நினைக்கின்றீர் - 2

நன்றி ஐயா நன்றி ஐயா - 4


Song Description: Tamil Christian Song Lyrics, Pathukappar Nerukkadiyil, பாதுகாப்பார் நெருக்கடியில்.
KeyWords:  Jebathotta Jeyageethangal, JJ Songs, Father Songs, Fr Songs, Father Berchmans songs, jebathotta jeyageethangal - 39, jebathotta jeyageethangal songs lyrics, Padhukappar Nerukkadiyil, Padhukaappar Nerukkadiyil.


All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.