Immattum Jeevan Thantha - இம்மட்டும் ஜீவன் தந்த



இம்மட்டும் ஜீவன் தந்த
கர்த்தாவை அத்தியந்த
எண்ணமாய்த்
ஸ்தோத்தரிப்போமாக-2
நம்மை ரட்சிக்க வந்து
தம்மை பலியாய்த் தந்து-2
நற்சுகம் மேவவும் அற்புதமாகவும்-2
                                - இம்மட்டும்

1. காலம்சொல் போல் கழியும்,
தண்ணீரைப்போல் வடியும்,
கனாவைப் போலேயும் ஒழியும்;
வாலிபமும் மறையும்,
சீலம் எல்லாம் குறையும்,
மண்னின் வாழ் வொன்றும்
நிற்க மாட்டாது
கோலப் பதுமைக்கும்,
நீர்க குமிழிக்கும், புகைக்குமே-2
கொண்ட உலகத்தில்
அண்டபரன் எமைக்
கண்டு கருணைகள் விண்டு தயவுடன்
                                - இம்மட்டும்

2. பலவித இக்கட்டையும்
திகில்களையும் கடந்தோம்
பரம பாதையைத் தொடர்ந்தோம்
வலிய தீமையை வென்றோம் ,
நலியும் ஆசையைக் கொன்றோம் ,
வஞ்சர் பகைக்கும் தப்பி நின்றோம் ;
கலிஎன்ற தெல்லாம் விண்டோம் ,
கர்த்தாவின் மீட்பைக் கண்டோம்;
காய்ந்த மனதொடு பாய்ந்துவிழு கணம்
சாய்ந்து கெடவும் ஆராய்ந்து நெறியுடன்
                                - இம்மட்டும்

3. சனசேதம் வருவிக்கும் ,
கேடுகட்கோர் முடிவு தந்து ,
நொறுங்கினதைக் கட்டிக்
கன சபையை ஆதரித்
தன்பாய் ஆசீர்வதித்துக்
கண்ணோக்கி எல்லார்மேல் அன்றன்று
தினமும் அருள் உதிக்கச் செய்து , தமது தேவ
சிந்தை யினோடதி விந்தையதாய் உயிர்
மைந்தனால் எங்களை இந்த வினோதமாய்
                                - இம்மட்டும்


Songs Description: Christian Song Lyrics, Immattum Jeevan Thantha, இம்மட்டும் ஜீவன் தந்த.
KeyWords: Tamil Christian Song Lyrics, Clement Vedanayagam Sasthriyar, Beryl Natasha, Vedanayagam Sasthriyar, Immattum Jeevan Thantha, Immattum Jeevan.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.