Paavikku Pugalidam - பாவிக்குப் புகலிடம்



பாவிக்குப் புகலிடம்
என் இயேசு இரட்சகர்
பாரினில் பலியாக மாண்டாரே

பரிசுத்தரே பாவமானாரே
பாரமான சிலுவை சுமந்தவரே

காட்டிக் கொடுத்தான் முப்பது வெள்ளிக்
காசுக்காகவே கர்த்தர் இயேசுவை
கொலை செய்யவே கொண்டு போனாரே
கொல்கதா மலைக்கு இயேசுவை - 2

கள்ளர் மத்தியில் ஒரு கள்ளன் போல்
குற்றமற்ற கிறிஸ்தேசு தொங்கினார்
பரிகாசமும் பசிதாகமும்
படுங்காயமும் அடைந்தாரே - 2

கால்கள் கைகளில் ஆணி பாய்ந்திட
கிரீடம் முள்களில் பின்னி சூடிட
இரத்த வெள்ளத்தில் கர்த்தர் தொங்கினார்
இதைக் கானும் உள்ளம் தாங்குமோ - 2

உலகத்தின் இரட்சகர் இயேசுவே
உயிர் கொடுத்தார் உயிர்த்தெழுந்தார்
தம்மை நம்பினால் உன்னைக் கைவிடார்
தளராமல் நம்பி ஓடி வா - 2

பாவ சாபங்கள் தீரா வியாதிகள்
பல தோல்விகள் உந்தன் வாழ்க்கையில்
கண்டு நீ மனம் கலங்குவதேன்
கர்த்தர் இயேசுவண்டை ஓடி வா - 2

வருத்தப்பட்டு பாரம் சுமப்போரே
வாருங்கள் என்னண்டையில் எங்கிறார்
இளைப்பாறுதல் தரும் இயேசுவை
இன்று தேடி நாடி நம்பி வா - 2


Song Description: Tamil Christian Song Lyrics, Paavikku Pugalidam, பாவிக்குப் புகலிடம்.
KeyWords: Communion song Lyrics, Good Friday Song Lyrics, Pavikku Pugalidam, Paavikku Puhalidam, Jolly Abraham.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.