Thuyarathil Kooppitten - துயரத்தில் கூப்பிட்டேன்


Scale: G Major - Pop & Rock


துயரத்தில் கூப்பிட்டேன்
உதவிக்காய் கதறினேன்
அழுகுரல் கேட்டிரையா - 2
குனிந்து தூக்கினீர்
பெரியவனாக்கினீர்
உமது காருண்யத்தால் - 2

குனிந்து தூக்கினீரே
பெரியவனாக்கினீரே
உமது காருண்யத்தால்               
பெரியவனாக்கினீரே - 2

2.எனது விளக்கு எரியச் செய்தீர்
இரவை பகலாக்கினீர் - 2
எரிந்து கொண்டிருப்பேன்
எப்போதும் உமக்காய்
என் ஜீவன் பிரியும் வரை - 2

எரிந்து கொண்டேயிருப்பேன்
எப்போதுமே உமக்காய்
என் ஜீவன் பிரியும் வரை
எரிந்து கொண்டேயிருப்பேன் - 2

3.நான் நம்பும் கேடகம்
விடுவிக்கும் தெய்வம்
நீர்தான் நீர்தானய்யா - 2
தூயவர் தூயவர்
துதிக்குப் பாத்திரர்
ஆறுதல் நீர்தானையா - 2

தூயவர் தூயவரே
துதிக்குப் பாத்திரரே
ஆறுதல் நீர்தானையா
தூயவர் தூயவரே - 2

4.சேனைக்குள் பாய்ந்தேன்
உந்தன் தயவாலே
மதிலைத் தாண்டிடுவேன் - 2
புகழ்ந்து பாடுவேன்
உம்மையே உயர்த்துவேன்
உயிர் வாழும் நாட்களெல்லாம் - 2

புகழ்ந்து பாடிடுவேன்
உம்மையே உயர்த்துவேன்
உயிர் வாழும் நாட்களெல்லாம்
புகழ்ந்து பாடிடுவேன் - 2


Song Description: Tamil Christian Song Lyrics, Thuyarathil Kooppitten - துயரத்தில் கூப்பிட்டேன்.
KeyWords: Father Berchmans, Jebathotta Jeyageethangal, Fr. Berchmans Songs.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.